Sunday 19th of May 2024 11:06:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மீது துப்பாக்கிப் பிரயோகம்!


யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமம் பாலாவி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணல் ஏற்றிச் சென்ற உழவியந்திரத்தை நிறுத்த முயற்சி மேற்கொண்டு பலனளிக்காமையால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உழவியந்திரத்தின் பெட்டியின் ரயர் ஒன்றில் சன்னம் துளைத்தமையால் அது காற்றுப் போய் காணப்படுவதாக தெரியவருகிறது.

உழவியந்திரத்தை இயக்கிச் சென்றவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதால் அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE